திருச்சியில் ஜனவரி 30, 31ந் தேதிகளில் ஜமாத்-ஏ-இஸ்லாமியின் தமிழ் மாநில மாநாடு நடைபெறுகிறது. இந்த இரண்டு நாள் மாநாட்டை அனைத்து இந்திய தலைவர ஜலாலுத்தீன் உமரி தொடங்கி வைக்கப்போவதாக செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. இதனையொட்டி ஒரு பெரும் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 30,000 பேர் இதில் பங்கெடுத்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.