Wednesday, January 20, 2010

கங்கண சூரிய கிரகணம்

இளையான்குடி, ஜன.16: இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம் நேற்று நிகழ்ந்தது. மிக அரிய வானியல் நிகழ்வான இந்த கிரகணத்துக்கு “கங்கண சூரிய கிரகணம்” என பெயரிட்டிருந்தனர். இந்தக் கிரகணம் இளையான்குடி பகுதிகளில் மிகத் தெளிவாகத் தெரிந்தது. விளையாட்டுத் திடல்கள் போன்ற இடங்களில் நின்று கொண்டு சிறுவர்களும், இளைஞர்களும் பார்த்து ரசித்ததோடு, பெண்களும் முதியவர்களும் வீட்டு மொட்டை மாடிகளில் நின்று கிரகணத்தைப் பார்த்து ரசித்தனர். இளையான்குடி மேலப்பள்ளிவாசல் வளாகத்தில் ஜூம்மா தொழுகைக்கு முன் சிறுவர்களும், இளைஞர்களும் கிரகணத்தைப் பார்க்கக் கூடிய விசேஷ கண்ணாடியை வைத்துப் பார்த்து மகிழ்ந்தனர். பிற்பகல் 12:30 முதல் 1:50 வரை கங்கண கிரகணம் இளையான்குடி பகுதியில் தெளிவாகத் தெரிந்தது.

Source : http://www.ilayangudi.org/